Sunday, June 20, 2010

ஷிர்டி பயணம் - 12 ஜூன் 2010


அக்டோபர் 2007 முதல், எல்லோரும் ஒன்று சேர்ந்து ஷிர்டிநாசிக் செல்ல வேண்டும் என திட்டமிட்டு, 3 வருடங்களாக தள்ளிச் சென்று கொண்டே இருந்தது. இந்த முறை எப்படியாவது சென்று விட வேண்டும் என அப்பா, அம்மா சொல்லிக் கொண்டிருந்தனர். விஷ்ணு, ஜெயகிருஷ்ணா ஸ்கூல் திறப்பதற்கு முன்பே சென்றால் வசதியாக இருக்கும் எனவும், அதுவும் மழை காலத்திற்கு முன்பே இருந்தால் இன்னமும் நன்றாக இருக்கும் என கருத்து தெரிவித்தனர். 12 ஜுன் செல்லலாம் என முடிவெடுத்தோம். அதன்படி, அப்பா, அம்மா 10 ஜூன் தாணே வந்து சேர்ந்தனர்.


12 ஜூன் 2010 - ஷிர்டி


அப்பா, அம்மா, வைஷாலி, விஷ்ணு, சுதாகர், ரேவதி, ஜெயகிருஷ்ணா, வேங்கடகிருஷ்ணன் மற்றும் நான் என எல்லோரும் டவேரா வண்டியில் காலை 0800 மணிக்கு தாணேயிலிருந்து கிளம்பி சென்றோம். அன்று, அமாவாசையாதலால், அப்பா காலையில், தர்ப்பணம் செய்து விட்டு கிளம்பினார். வைஷாலி, ரேவதி காலை, டிபன், மற்றும் இரவு உணவு தயாரித்து வைத்திருந்தனர்.


நான் ஷிர்டி சென்று 10 வருடங்கள் ஆகிவிட்டது. கடைசியாக 2000 வருஷத்தில் சென்றது. முதன் முறையாக, ஜூலை 1997ல், அப்பாவின் 60வது பிறந்த நாளை ஷிர்டியில் கொண்டாடினோம். மீண்டும் அடுத்த வருடம் இரண்டாவது முறையாக சென்றோம். சரோஜா அத்தை, ராமமூர்த்தி அத்திம்பேருடன் 2000 வருஷம் மூன்றாம் முறை. ஆக இது நான்காம் முறையாக சாய்பாபாவை தரிசிக்க சந்தர்ப்பம் ஏற்பட்டது.


இதற்கு முன்பு வரை, ஷிர்டிக்கு, பூனாவிலிருந்து தான் சென்றிருக்கிறோம். முதல் முறையாக இந்த தடவை தாணேயிலிருந்து சென்றோம். நல்ல வழியாக இருந்த்து. கசாராவின் மலைப்பாதை வளைந்து நெளிந்து போகும் பாதை. இதமான, ஈரப்பதமான காற்று என காலை பொழுது ரம்மியமாக அமைந்தது. சின்னார் வந்ததும், ஷிர்டி போகும் பாதை பிடித்து 1330 மணிக்கு ஷிர்டி சென்றடைந்தோம். சுமார் 230 கிமீ பயணம் செய்தோம். ஆந்திரா பவனில் எங்கள் மதிய உணவு உட்கொண்டோம். அருமையா, சுவையான, அன்பான சாப்பாடு. ஆந்திரா காரம் அதிகமாகவே இருந்த்து. நன்றாக வரவேற்று உபசரித்தனர்.

1430 மணிக்கு வரிசையில் நின்றுகொண்டோம். வாரக்கடைசி என்பதாலோ என்னவோ கூட்டம் அலை மோதியது. 3 மணி நேரம் வரிசையில் நின்ற பிறகே தரிசனம் கிடைத்தது. இருப்பினும் நேரம் போனது தெரியவில்லை. ஓம் சாய் நமோ நம: , ஸ்ரீ சாய் நமோ நம:, ஜெய ஜெய சாய் நமோ நம: , சத்குரு சாய் நமோ நம: என எல்லொரும் விடாமல் பாடிக் கொண்டிருந்த படியால் மனது லயித்து விட்டது. இடையில், சத்குரு சாய் மஹாராஜுக்கு என யாரோ ஒருவர் குரல் கொடுக்க அனைவரும் ஜே என கோஷம் போட்டுக் கொண்டே வந்தோம்.


இப்படியே சன்னதிக்கு வந்து சேர்ந்து விட்டோம். பாபாவைக் காண கண் கோடி வேண்டும். த்தனை பேர் தினமும் வந்த வண்ணம் இருக்கின்றனர். வரிசையில் பல மணி நேரம் ஆனாலும், கடினமாக இருந்த போதிலும், பாபாவைக் கண்டவுடன், எல்லாம் பனி போல கரைந்து விடுகிறது, தரிசனம் செய்கிற அந்த கணங்கள் நம்மை நாமே மறந்து அவரிடம் சமர்ப்பிக்கும் போது கிடைக்கிற சுகமே தனி. தரிசனம் முடிந்து வெளியே வந்தவுடன் ஒரு ஆத்ம திருப்தி அடைந்தோம். தரிசனம் முடிந்து ஒரு மணி நேரம் கோயிலில் இருந்தோம். “உதிஎனப்படும் பாபாவின் விபூதியை எடுத்துக் கொண்டோம்.


10 வருடங்கள் கழித்து ஷிர்டி கோயில் வருவதால், இடம் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளது. ஷிர்டியிலேயே, மாலை 1830 ஆகிவிட்டதால், சனி சிங்கனாபூர் போக முடியாது என தோன்றியது. 85 கிமீ செல்ல வேண்டும். சனி அமாவாசை ஆதலால் அங்கும் கூட்டம் அலை மோதும் என விசாரித்த்தில் தெரிய வந்த்து. அதையும் மீறி சென்றாலும் அங்கு போய், நாசிக் சென்றடைய அதிகாலை 2 மணி ஆகும் என்று தோன்றியது. இந்த காரணங்களால், செல்ல வேண்டாம் என தீர்மானித்தோம். சனி சிங்கனாபூர் செல்ல வில்லையே என வருத்தம் இருந்த போதிலும், அது தான் சரியான முடிவாக பட்டது.


ஷிர்டியிலிருந்து மாலை 1915 மணிக்கு கிளம்பி நாசிக் வந்து சேர்ந்த போது மணி 2115. சுமார் 90 கிமீ பயணம். ஏற்கனவே ஹோட்டலில் அறைகள் முன் பதிவு செய்திருந்தோம். இரவு உணவு சாப்பிட்டு, கொஞ்ச நேரம் அரட்டை அடித்து விட்டு பாபாவை நினைத்துக் கொண்டு 2300 மணிக்கு அறைகளில் படுத்து தூங்கினோம்.

பி.கு: மொபைல் போன், காமெரா தற்போது ஷிர்டி கோயிலில் எடுத்து செல்ல அனுமதி இல்லை. இதை வைத்துக் கொள்ள தனி க்ளோக் ரூம் வசதி ஏற்பாடு உள்ளது. ஒரு பொருளுக்கு 2/= வாடகை.


நாசிக் பயணம் தொடரும்.....

2 comments:

N. JAYAKRISHNA said...

NICE WORK PERIAPPA









N.JAYAKRISHANA

Vasudevan Sundaresan said...

உனக்கும், விஷ்ணுவுக்கும் தாத்தா சொல்லிக் கொடுத்த தமிழ் ஞாபகப் படுத்தவே எழுதினேன்.

நீ படித்து அதற்கு பதிலும் போட்டிருப்பது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது

உன் ஆர்வத்தை பாராட்டுகிறேன்.

பெரியப்பா