Wednesday, September 15, 2010

விநாயகர் சதுர்த்தி



”விநாயகனே வினை தீர்ப்பவனே, வேத முதல்வோனே, ஞான முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே
குணாநிதியே குருவே சரணம், குறைகள் தீர்க்க இதுவே தருணம்”



எங்களை பொறுத்தவரை, இந்த வருஷம், விநாயக சதுர்த்தியின் சிறப்பம்சம், நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாடியது. பல வருஷங்களாக இது போன்ற சந்தர்ப்பம் அமையவில்லை. இன்னும் சொல்லப் போனால், வரலஷ்மி விரதம், கோகுலாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி என எல்லா பண்டிகைகளையும் சேர்ந்தே கொண்டாடினோம். ஆவணி அவிட்டம் மட்டும் நானும் சுதாகரும் சேர்ந்து பூணல் போட்டுக் கொண்டோம்.

அப்பா, அம்மா எங்களுடன் சேர்ந்து கொண்டு, பண்டிகை கொண்டாடியதில் எங்கள் அனைவருக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி.
சுதாகர், ரேவதி நல்ல பெரிய பிள்ளையார் 10ம் தேதி வாங்கி வந்தனர். அதனுடன் பூஜைக்கு தேவையான பூ, பழம், என வாங்கி வந்தனர். அன்றே, அப்பா, அம்மா, விஷ்ணு, ஜெயகிருஷ்ணா, எங்கள் சொசைட்டியின் பெரிய தோட்டத்திலிருந்து பூக்களையும், இலைகளையும் பறித்து வந்தனர்.
                                                                                                











அன்று இரவு அம்மா, இரண்டு வீட்டிலும் கோலம் போட்டார். வீடு களை கட்ட ஆரம்பித்து விட்டது. எனக்கு, ஆபீஸ் இருந்ததால் நான் ஒன்றும் செய்யவில்லை. அதனால் என் பங்குக்கு வீட்டிற்கு வந்ததும், மின்சார சர விளக்கு அலங்காரம் செய்தேன்.



மறுநாள், 11 ம் தேதி, 11 மணிக்கு பூஜை ஆரம்பம் ஆனது. அப்பா மந்திரம் 


சொல்ல, விஷ்ணு, ஜெயகிருஷ்ணா பூஜை செய்தார்கள். இதுவும் ஒரு சிறப்பு. தாத்தா மந்திரம் சொல்ல இரண்டு பேரன்களும் பூஜை செய்வது இதுவே முதல் தடவை. சுமார்.12.45 மணிக்கு பூஜை நிறைவு பெற்றதுஎங்கள் வீட்டில் எல்லோருக்கும் சமையல் வைஷாலி செய்தாள். நெய்வேத்தியத்துக்கு வேண்டிய அனைத்தையும் அம்மா, ரேவதி கீழ் வீட்டில் செய்தார்கள்.




சொசைட்டியில் 5 நாள் பூஜை நடக்கிறது. தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் ஆரத்தி நடக்கிறது. பல கலை நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது. ஜெயகிருஷ்ணா 5 ஹிந்தி பாடல்கள் பாடினான். விஷ்ணுவுக்கு 13 ம் தேதியிலிருந்து முதல் செமஸ்டர்!! (Courtesy: CCE (Continuous Comprehensive Evaluation) of New Pattern CBSE) பரீட்சை ஆரம்பம் ஆனதால், அவன் கலந்து கொள்ளவில்லை. எங்களை பொறுத்தவரை இன்னும் பூஜை முடியவில்லை. சுதாகர் ஜாம்ஷெட்பூர் சென்றுள்ளதால், அவன் வந்த பிறகு விசர்ஜன் செய்ய எண்ணியுள்ளேன். .

ராஜா சித்தப்பா, வாசு, சுபா ஏற்கனவே அவரவர் வீட்டின் விநாயக சதுர்த்தியை அழகாக எழுதியிருந்தார்கள். நானும் இதை ஏற்கனவே எழுதி முடித்தாலும் இதை போஸ்ட் செய்வதில் தாமதம் ஏற்பட்டு விட்டது.


ஆக மொத்தம் நல்ல விதமாக சிறப்பாக பூஜை நடத்தப் பட்டது. என் பங்கு PRO வேலை மட்டும் தான்!!!! அப்பா, அம்மா 12ம் தேதி பூனா திரும்பினார்கள்.


பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும்
இவை நான்கும் கலந்துனக்கு நான் தருவேன்,
கோல துங்கக் கரிமுகத்து தூமணியே,
நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா
”ஜெய தேவ ஜெய தேவ ஸ்ரீ மங்கள மூர்த்தி,
தர்ஷன் மார்தே மன காமனா பூர்த்தி
ஜெய தேவ ஜெய தேவ”




.

1 comment:

Anonymous said...

Dear Vasu Uncle,

All the kolams are beautiful. It was very nice to see the appam, vadai, kozhukkattai etc.

Ganesh idols are cute. I enjoyed seeing it.

Yours affectionately,
Vaishnavi Kumar