அழகான கவிதை
ஆழமான கருத்து
இனிய நடை
ஈர்த்தது மனதை
உள்ளம் குளிர்ந்தது
ஊரறிந்த உண்மை
எங்களருமை பாட்டியின் பெருமை
ஏற்றமடைகிறது தினமும்
ஐயமில்லாத திண்மை
ஒரு கவிதை சொன்னீர்கள்
ஓரமாக நின்று ரசித்தோம்
ஔவை பாட்டியின் (ஆத்திச்சூடி) வழி
அஃதே என் பாராட்டு மொழி